சொர்க்கவாசல் ரய்யான் | Sorgavaasal Rayyan
₹60.00
10 in stock
Description
இஸ்லாத்தின் ஜம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு புனிதமிக்க ரமளான் மாதத்தில் மாபெரும் அற்புதமான திருமறைக்குர்ஆனை அல்லாஹ் இறக்கியருளினான். இவ்வற்புத அத்தை வழங்கியமைக்காக தனக்கு நன்றி பாராட்டும் பொருட்டு பருவ வயதை அடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கினான்.இந்த நோன்பின் சட்டத்திட்டங்கள் பற்றியும்,அது கடமையாக்கப்பட்ட மாதத்தின் புனிதம் பற்றியும்,அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் சொர்க்கவாசல் ரய்யான் என்ற தலைப்பின் கீழ் விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நோன்பு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய இந்நூல், வாசகர்களாகிய உங்களுக்கு எல்லாவிதமான தெளிவையும் அளிக்கப் போதுமானதாக இருக்கும் என நம்புகிறோம்.ஒவ்வோர் ஆண்டும் ரமலானில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நோன்பு சம்பந்தமான அடிப்படையான விஷயங்களை மறந்துவிடுவதும் அது குறித்த ஐயங்களை எழுப்புவதும் வழக்கமாக உள்ளது. நோன்பு சம்பந்தப்பட்ட அடிப்படையான ஐயங்களை இந்நூல் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | மர்யம் பப்ளிகேஷன்ஸ் |
Author Name | ஜெய்னப் காதர் சித்தீக்கிய்யா |