அற்புதமா?சூனியமா?தந்திரமா? | Arpudhama? Sooniyama? Thandhirama?
₹15.00
6 in stock
Description
இன்று உலகில் காணப்படும் மதங்கள் அனைத்தும் கடவுளின் பெயராலேயே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கடவுள்களில் அநேகர் அற்புதங்களின் அடிப்படையிலேயே நம்பப்பட்டு வருகின்றன. மனித சமூகத்தின் மத்தியில் ஆங்காங்கே சிலர் அற்புதங்கள் நிகழ்த்தி தங்களை கடவுள்கள், கடவுளின் அவதாரங்கள், கடவுளின் நேசர்கள் என்றெல்லாம் அறிமுகப் படுத்திக் கொண்டும் வலம் வருகின்றனர். ஆக அற்புதங்கள் என்பவை மனிதனின் நம்பிக்கைக்கு ஒரு முக்கிய அடிப்படையாக இருக்கின்றது என்பது உண்மையாகும். கடவுளின் பெயரால் கூறப்படும் அல்லது காட்டப்படும் இவைகள் அற்புதங்கள் தானா அல்லது சூனியமா? அல்லது தந்திரமா? என்பதை தெளிவுபட அறிய உதவவும், அற்புதங்கள் என்பவை உண்டா? இல்லையா உண்மையில் அற்புதம் என்றால் என்ன அதன் நிலைபாடு என்ன சூனியம் என்றால் என்ன? அதன் நிலைபாடு என்ன? இல்லை எல்லாம் தந்திரங்களா? என்பவற்றையெல்லாம் தெளிவுபட அறிவித்திடவும், ஒருவன் எதனைக் கொண்டு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையும் அறிவித்திடவுமான எண்ணத்தில் இந்நூலின் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலை தொகுத்து வழங்கிய அஆஸியா அவர்களுக்கும் இந்நூல் வெளிவருவதற்கு பலவகையில் உதவிய அன்பர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக, ஏக இறைவனின் பாதையிலான இப்பணியை அவன் ஏற்புடையதாக்கிக் கொள்வானாக
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ ஆசியா |