பொது சிவில் சட்டம் ஏன் கூடாது | Podhu Sivil Sattam Yen Koodadhu?
₹15.00
8 in stock
Description
இந்திய அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் க்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. “எல்லா மக்களுக்கும் எல்லாப் பிரிவினருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அப்பிரிவு வலியுறுத்துகிறது. இதன் காரணமாகத்தான் முஸ்லிம் தனியார் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்; பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கூச்சல் தொடர்ந்து போடப்படுகிறது,இந்தக் காட்டுக் கூச்சலுக்கு கச்சிதமாய் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான G.M பனாத்வாலா அவர்கள் 29-3-1985 அன்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவை நீக்கக் கோரி அல்லது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு தரும்படி ஒரு சட்ட முன்வடிவை (மசோதாவை) நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்து ஒரு சிறப்பான பேருரையும் ஆற்றினார்.முஸ்லிம் தனியார் சட்டத்தின் முக்கியத்துவம் என்ன, தனித்தன்மை என்ன, அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை அழகாக விளக்கியதுடன் பொது சிவில் சட்டம் எனும் கருத்தோட்டத்தையும் அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்து பல ஆதாரங்களுடன் விவாதித்தார். எல்லாக் கோணத்தி லிருந்தும் பிரச்னையை அணுகி மிகக் கண்ணியமான முறையில் அவர் நிகழ்த்திய பேருரை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியில் உள்ள அறிஞர்களும் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது.அந்த அருமையான உரையை சூடும் சுவையும் குறையாமல் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள் ளோம். முஸ்லிம் சகோதரர்கள் இதைத் தாமும் படித்து தெளிவு பெறுவதுடன் முஸ்லிமல்லாத சகோதரர் களுக்கும் இந்த நூலைப் படிக்கக் கொடுத்து அவர் களையும் தெளிவு பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.நமது முயற்சிகளுக்கு இறைவன் வெற்றி அளிப்பானாக.
Additional information
Weight | 20 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | G.M. பனாத்வாலா |